கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மக்கள் அவதி

கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கோவை: கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை வடவள்ளி - கவுண்டம்பாளையம் - தொண்டாமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் 2வது ஸ்கீமில் பில்லூர் அத்திகடவு குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் செல்ப்பனூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சச குழாய் மூலமாக பெட்டதாபுரம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்கிறது.



பெட்டதாபுரம் அருகே ராட்சச குழாயில் பிளவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் கசிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.



தற்போது ராட்சச குழாயின் பிளவு பெரிதாகி உடைந்ததால் குடிநீர் வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.



வெளியேறும் நீர் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...