கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மக்கள் அவதி

கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கோவை: கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை வடவள்ளி - கவுண்டம்பாளையம் - தொண்டாமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் 2வது ஸ்கீமில் பில்லூர் அத்திகடவு குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் செல்ப்பனூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சச குழாய் மூலமாக பெட்டதாபுரம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்கிறது.



பெட்டதாபுரம் அருகே ராட்சச குழாயில் பிளவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் கசிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.



தற்போது ராட்சச குழாயின் பிளவு பெரிதாகி உடைந்ததால் குடிநீர் வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.



வெளியேறும் நீர் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...