கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மக்கள் அவதி

கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கோவை: கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை வடவள்ளி - கவுண்டம்பாளையம் - தொண்டாமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் 2வது ஸ்கீமில் பில்லூர் அத்திகடவு குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் செல்ப்பனூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சச குழாய் மூலமாக பெட்டதாபுரம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்கிறது.



பெட்டதாபுரம் அருகே ராட்சச குழாயில் பிளவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் கசிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.



தற்போது ராட்சச குழாயின் பிளவு பெரிதாகி உடைந்ததால் குடிநீர் வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.



வெளியேறும் நீர் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...