கோவை சிங்காநல்லூர் அருகே சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஜூலை 21 மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), தங்கவேல் (42), சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் (49), கள்ளிமடை கருப்புசாமி (38), விக்னேஸ்வரன் (32) மற்றும் மனோஜ் குமார் (20) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 சேவல்களும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.7,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...