கோவை சிங்காநல்லூர் அருகே சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஜூலை 21 மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), தங்கவேல் (42), சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் (49), கள்ளிமடை கருப்புசாமி (38), விக்னேஸ்வரன் (32) மற்றும் மனோஜ் குமார் (20) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 சேவல்களும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.7,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...