கோவை மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட 10 காட்டு யானைகள்

கோவை மருதமலை அருகே 10 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் ஜூலை 21 அன்று சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டன. இந்த யானைக் கூட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழைந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

இருப்பினும், யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் திரும்பி வந்தன. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் தங்கள் கைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தடாகம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...