கோவை மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட 10 காட்டு யானைகள்

கோவை மருதமலை அருகே 10 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் ஜூலை 21 அன்று சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டன. இந்த யானைக் கூட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழைந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

இருப்பினும், யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் திரும்பி வந்தன. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் தங்கள் கைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தடாகம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...