குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும்நடவடிக்கை- கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுக்கப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் போது வீட்டுக் குடிநீர் இணைப்புதாரர்கள் தங்களது குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்க வேண்டாம் என இணைப்புதாரர்களிடம் பலமுறை நேரில் எச்சரித்தும் தொடர்ந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

எனவே குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்.

எனவே, பொது மக்கள் குடிநீர் குழாய் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தாதவாறு போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...