உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. பாரம்பரிய யானை வழித்தடங்களை விடுத்து புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டாம்.

2. சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

3. காட்டு பன்றி, குரங்கு, மான், மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாவதை தடுக்க வேண்டும்.

4. கேரள அரசைப் போன்று பன்றிகளை கட்டுப்படுத்த வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.



5. வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் சேதமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

6. கிராமப்புறங்களில் நாய்களால் உயிரிழக்கும் ஆடு, கன்றுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

7. நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் எஸ் பரமசிவம், மடத்துக்குளம் தாலூகா செயலாளர் வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...