கோவை: காவல்துறை பெயரில் 9 லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர் டீசல் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு

கோவையில் காவல்துறை பெயரில் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் டீசல் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் டீசல் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் காவல்துறையின் பெயரைப் பயன்படுத்தி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் நீதி கேட்டு டீசல் பாட்டிலுடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கார்மெண்ட் நிறுவனத்தில் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தார். லெனின் மற்றும் அவரது மனைவி அமிர்தவள்ளி (பீளமேடு காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர்) ஆகியோர் கோவை மற்றும் திருப்பூர் காவலர் கேண்டின்களில் ஆன்லைன் ஆர்டர் சேவை தொடங்க உள்ளதாகக் கூறி பார்த்திபனிடம் கடன் கேட்டுள்ளனர்.



இதன்பேரில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பார்த்திபன் தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் இருந்து 8,90,000 ரூபாயை லெனின் மற்றும் அமிர்தவள்ளி ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணத்தை திரும்பக் கேட்டபோது, அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும், தாங்கள் காவல்துறையில் பணிபுரிவதாகக் கூறி பார்த்திபனை மிரட்டியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பார்த்திபன் கூறுகிறார். கடந்த மார்ச் மாதம் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தும் சிங்காநல்லூர் ஏசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பார்த்திபன், கையில் டீசல் பாட்டிலுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரிடமிருந்து டீசல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மோசடி குற்றச்சாட்டுகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...