கோவையில் முக்கனி அறக்கட்டளை 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது

கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை 12வது ஆண்டு நல்லிணக்க விழாவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவையில் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக 12 ஆம் ஆண்டு நல்லிணக்க விழா சுகுணாபுரம் பகுதியில் உள்ள ரெயின்போ காலனியில் நடைபெற்றது. முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் O.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



15 நபர்களுக்கு தையல் மிஷின்கள், பார்வையற்றவர்களுக்கு நவீன கைக்குச்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தன்னலம் பாராமல் பணியாற்றிவரும் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரிய பறை இசை, சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வு மூலம் முக்கனி அறக்கட்டளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவி செய்வதோடு, தமிழர் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...