போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் இரு சரகங்களுக்கும், மாவட்டத்திற்கும் சிறப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


Coimbatore: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான காவலர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.




அதேபோல தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று, மாநகருக்கு இரண்டு என போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாநில அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




இதையடுத்து கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரு சிறப்புப் படைகளையும் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.




இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் கூறியதாவது: போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து வருகின்றன. அதற்கான காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவையான வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.




அதன்படி, கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு சரகத்திற்கு தலா ஒரு SI மற்றும் 5 காவலர்களும், அவர்களுக்கு தலா ஒரு வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.




அதேபோல மாவட்டத்திற்கும் ஒரு SI தலைமையில் 5 காவலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜோசப் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள். இந்த சிறப்புப் படைகள் மூலம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...