உடுமலைப்பேட்டை: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு - மலைவாழ் மக்கள் அவதி

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர், கூட்டாறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

கூட்டாறு வழியாக தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.



தற்போது, கடந்த சில நாட்களாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், தற்போது சிறு படகு மூலம் கூட்டாற்றைக் கடக்க வேண்டிய அபாயகரமான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர்மட்டம் மேலும் உயரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், கூட்டாற்றைக் கடக்க மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டாறு பகுதியில் ஆய்வு செய்து, தற்காலிக மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இதற்கிடையே, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 2,800 கன அடி நீர் வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக 2,325 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி கொள்ளளவில் 88.19 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...