உடுமலைப்பேட்டை: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு - மலைவாழ் மக்கள் அவதி

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர், கூட்டாறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

கூட்டாறு வழியாக தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.



தற்போது, கடந்த சில நாட்களாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், தற்போது சிறு படகு மூலம் கூட்டாற்றைக் கடக்க வேண்டிய அபாயகரமான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர்மட்டம் மேலும் உயரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், கூட்டாற்றைக் கடக்க மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டாறு பகுதியில் ஆய்வு செய்து, தற்காலிக மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இதற்கிடையே, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 2,800 கன அடி நீர் வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக 2,325 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி கொள்ளளவில் 88.19 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...