பெல்ஜியம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிக் கோப்பை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு உற்சாக வரவேற்பு

பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று வெள்ளிக் கோப்பையை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்ப்லாண்டர் கிராண்டு பிரிக்ஸு 2024 ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுமி மேஹா சிறப்பாக செயல்பட்டு வெள்ளிக் கோப்பையை வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த அருண் சக்தி மற்றும் வித்யா சம்பத் தம்பதியரின் மகளான மேஹா, இந்த சர்வதேச போட்டியின் ஆறு சுற்றுகளில் பங்கேற்றார்.



அதில் மூன்று சுற்றுகளில் தங்கப் பதக்கமும், மற்ற மூன்று சுற்றுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். ஒட்டுமொத்த போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிக் கோப்பையை வென்றார்.

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மேஹா, சிறு வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பங்கேற்றவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்த ஸ்கேட்டிங் போட்டியில் கோப்பை வென்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இவ்விருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கோயம்புத்தூரில் 33 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்வது கனவாகவே இருந்தது. இந்நிலையில், சிறுமி மேஹா வெள்ளிக் கோப்பையை வென்று வந்தது ஸ்கேட்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கோப்பையுடன் கோவை திரும்பிய மேஹாவுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக கோப்பைகளை வென்று தருவதே தனது இலக்கு என மேஹா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியாளர்கள் கோப்பையை வெல்ல முடியும் என பயிற்சியாளர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...