பெல்ஜியம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிக் கோப்பை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு உற்சாக வரவேற்பு

பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று வெள்ளிக் கோப்பையை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்ப்லாண்டர் கிராண்டு பிரிக்ஸு 2024 ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுமி மேஹா சிறப்பாக செயல்பட்டு வெள்ளிக் கோப்பையை வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த அருண் சக்தி மற்றும் வித்யா சம்பத் தம்பதியரின் மகளான மேஹா, இந்த சர்வதேச போட்டியின் ஆறு சுற்றுகளில் பங்கேற்றார்.



அதில் மூன்று சுற்றுகளில் தங்கப் பதக்கமும், மற்ற மூன்று சுற்றுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். ஒட்டுமொத்த போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிக் கோப்பையை வென்றார்.

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மேஹா, சிறு வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பங்கேற்றவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்த ஸ்கேட்டிங் போட்டியில் கோப்பை வென்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இவ்விருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கோயம்புத்தூரில் 33 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்வது கனவாகவே இருந்தது. இந்நிலையில், சிறுமி மேஹா வெள்ளிக் கோப்பையை வென்று வந்தது ஸ்கேட்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கோப்பையுடன் கோவை திரும்பிய மேஹாவுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக கோப்பைகளை வென்று தருவதே தனது இலக்கு என மேஹா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியாளர்கள் கோப்பையை வெல்ல முடியும் என பயிற்சியாளர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...