அட்டகட்டியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது

வால்பாறை வட்டம், அட்டகட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஒவ்வொறு துறை தொடர்பாக பொதுமக்கள் அரிந்திடும் வகையில் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். 



முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், கோவை வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலைத்துறை இணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர்,



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திரணாளிகள் நல அலுவலர், சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர், தனித்துணை ஆட்சியர், வால்பாறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர், வால்பாறை காவல் ஆய்வாளர், வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்றனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு சிறப்புரை ஆற்றினார். வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றி அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.



முகாமில் பழங்குடியின மக்களுக்கு சான்றுகள், மின்னணு குடும்ப அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் வால்பறை வட்டாட்சியர் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...