கோவையில் ஆடிட்டரை கடத்தி 10 லட்சம் பறித்த மூவர் கைது; ஒருவர் தலைமறைவு

கோவையில் ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸை கடத்தி 10 லட்சம் ரூபாய் மற்றும் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சூத்திரதாரி பிருந்தா தலைமறைவாக உள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸ் (48) கடந்த மாதம் தனது முகநூல் பக்கத்தில் ஹோட்டல்கள் குத்தகைக்கு தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த பிருந்தா என்பவர் தொடர்பு கொண்டு, தேனி மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஹோட்டல் ஒன்று குத்தகைக்கு இருப்பதாகக் கூறினார்.

பிருந்தாவின் கோரிக்கையின் பேரில், பின்சி லாசரஸ் போஸ் 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டார். நேற்று முன்தினம், பிருந்தாவின் நண்பர்கள் என்று கூறப்பட்ட மூன்று நபர்களுடன் பின்சி லாசரஸ் போஸ் காரில் புறப்பட்டுச் சென்றார்.

ஜீவா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தின் அருகே காரை நிறுத்திய அந்த மூவரும், கத்தியைக் காட்டி மிரட்டி பின்சி லாசரஸ் போஸிடமிருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4¼ பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பின்சி லாசரஸ் போஸ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (38), அஸ்வின் (29) மற்றும் கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜின்சன் (37) ஆகிய மூவரையும் நேற்று (ஜூலை 19) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணம், 4¼ பவுன் தங்கச் சங்கிலி, மூன்று கைபேசிகள், கத்தி மற்றும் ஆடிட்டரை கடத்தப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான பிருந்தா தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...