முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு: திருப்பூர் பாஜக நிர்வாகி கைது

கோவை சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஜூலை 19 அன்று தமுமுக கோவை மத்திய மாவட்டத் தலைவர் சர்புதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், "குன்னத்தூர் முதல்வர்" என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றியும், இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவுகளை வெளியிட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவதூறு பதிவுகளை வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது.

நேற்று மாலை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நந்தகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...