முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு: திருப்பூர் பாஜக நிர்வாகி கைது

கோவை சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஜூலை 19 அன்று தமுமுக கோவை மத்திய மாவட்டத் தலைவர் சர்புதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், "குன்னத்தூர் முதல்வர்" என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றியும், இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவுகளை வெளியிட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவதூறு பதிவுகளை வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது.

நேற்று மாலை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நந்தகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...