கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இதனை தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஜூலை 20 அன்று நடைபெற்றது. இந்த முகாமை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவர் பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



ஹிந்துஸ்தான் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இந்த மருத்துவ முகாமில் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது போன்ற மருத்துவ முகாம்கள் பத்திரிகையாளர்களின் உடல்நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...