கோவையில் நடமாடும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

கோவை நகரின் பல பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மத்திய நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. உக்கடம், கோட்டைமேடு, பெரிய கடை வீதி, ரத்தினபுரி போன்ற பகுதிகளில் குரங்குகள் புகுந்து தொல்லை தருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 19 அன்று சிவானந்தா காலனியில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதிக்கு வந்த குரங்கு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகர் பகுதியிலும் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குரங்குகளின் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் வருவதற்கு முன்பே குரங்குகள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளின் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர வனத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...