உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாரியம்மன், வன பத்ரகாளியம்மன், ஆண்டாள் நாச்சியார், தங்காத்தாள் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.


Coimbatore: உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலையின் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர் உட்பட 14 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 14 வகை சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாரதனை, கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன.

குறுஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் மற்றும் ஏரி பாளையம் தங்காத்தாள் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...