சிறுவாணி அணை நீர்மட்டம் 42.02 அடியாக உயர்வு: ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் நான்கு வாரத்தில் 30 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கேரள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கு மேல் உயர்ந்து, தற்போது 42.02 அடியை எட்டியுள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் 23-ம் தேதி 11.32 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 42.02 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட உயரம் 45 அடி என்பது குறிப்பிடத்தக்கது.




முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரள அதிகாரிகள் அணையின் அவசரகால வழியாக வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர். அணைக்கட்டு பகுதியில் 47 மி.மீ. மழையும், அடிவாரப் பகுதியில் 27 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்ட அளவு 49.53 அடி ஆகும். ஆனால், 45 அடி வரை மட்டுமே நீர் தேக்க அனுமதி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணை விரைவில் நிரம்பும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இந்த அணையிலிருந்து பெறப்படும் நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள் மற்றும் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...