வால்பாறையில் புதிய சாலையில் பள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து, சாலை அமைப்பில் குறைபாடு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 12 கோடி மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய சாலைக்கு மேல் சிறிது கற்கள் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



ஊசிமலை எஸ்டேட் தண்ணி கான் செட் என்ற பகுதியில் சிறிய ஓடை உள்ளது. கடந்த நாட்களில் மழை வராமல் ஓடையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. ஆனால் சில தினங்களாக அதிக கனமழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து வழக்கம் போல் ஓடையின் பாதையில் தண்ணீர் சென்றது. தற்போது ஓடையின் மேல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் பதித்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை பணி நடைபெறும் போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்கள் அப்பகுதியில் பணி செய்யும் பொழுது அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...