வால்பாறையில் புதிய சாலையில் பள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து, சாலை அமைப்பில் குறைபாடு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 12 கோடி மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய சாலைக்கு மேல் சிறிது கற்கள் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



ஊசிமலை எஸ்டேட் தண்ணி கான் செட் என்ற பகுதியில் சிறிய ஓடை உள்ளது. கடந்த நாட்களில் மழை வராமல் ஓடையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. ஆனால் சில தினங்களாக அதிக கனமழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து வழக்கம் போல் ஓடையின் பாதையில் தண்ணீர் சென்றது. தற்போது ஓடையின் மேல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் பதித்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை பணி நடைபெறும் போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்கள் அப்பகுதியில் பணி செய்யும் பொழுது அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...