வால்பாறையில் புதிய சாலையில் பள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து, சாலை அமைப்பில் குறைபாடு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 12 கோடி மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய சாலைக்கு மேல் சிறிது கற்கள் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



ஊசிமலை எஸ்டேட் தண்ணி கான் செட் என்ற பகுதியில் சிறிய ஓடை உள்ளது. கடந்த நாட்களில் மழை வராமல் ஓடையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. ஆனால் சில தினங்களாக அதிக கனமழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து வழக்கம் போல் ஓடையின் பாதையில் தண்ணீர் சென்றது. தற்போது ஓடையின் மேல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் பதித்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை பணி நடைபெறும் போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்கள் அப்பகுதியில் பணி செய்யும் பொழுது அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...