சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்; பல்வேறு இடங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 18) துவக்கி வைத்தார்.





தொடர்ந்து சூலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.





பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் பேசிய ஆட்சியர், அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



மேலும் வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவிகளைச் சந்தித்து பேசிய ஆட்சியர், ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.

கள ஆய்வின் இடையே ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பள்ளிகள் CSR உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார்.

தென்மேற்கு பருவமழை குறித்து பேசிய ஆட்சியர், "கோவை மாவட்டத்தில் மழை சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது, அருகே சென்று செல்ஃபி எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம்," என்று கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...