அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை நிரம்பியதால், பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 7,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது.



இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக 2,000 கன அடியும், பிரதான கால்வாய் மூலம் 1,000 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடுதலாக உபரி நீரை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கரையோர கிராமங்களான கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், ருத்திரபாளையம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும்.

அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...