கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டராக்ட் கிளப் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியது

கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டராக்ட் கிளப் மாலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவர்களுக்கு ரூ.25,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியது. இந்த நிகழ்வு ஜூலை 16, 2024 அன்று நடைபெற்றது.


கோவை: கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டராக்ட் கிளப் சமூக சேவை நிகழ்வான "ஸ்போர்டிவா" திட்டத்தின் கீழ் மாலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது.



இந்த திட்டம் ஜூலை 16, 2024 அன்று நடைபெற்றது.



14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு வாலிபால் அணிகள், மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு கோ-கோ அணிகளுக்கு மொத்தம் ரூ.25,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் கிளப் தலைவர் ரோட்டராக்டர் ஜெய்சீலன், செயலாளர் ரோட்டராக்டர் ருத்ரா, மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி ரோட்டராக்டர் PHF. தங்கபாண்டியன் ஆகியோர் முன்னின்று வழிநடத்தினர்.



இந்த திட்டத்திற்கு ரோட்டராக்டர் PHF. தங்கபாண்டியன் மற்றும் ரோட்டராக்டர் சூர்யநாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.



மாலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சரோஜினி, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமாரசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ரோட்டராக்ட் கிளப்பின் முக்கிய உறுப்பினர்களான ரோட்டராக்டர் அன்புச்செல்வன் (இணை செயலாளர்), ரோட்டராக்டர் ஹேமஸ்ரீ புவனா (பொருளாளர்), ரோட்டராக்டர் நாதியா (மாவட்ட முன்னுரிமை திட்டத் தலைவர்), ரோட்டராக்டர் லோகேஷ் (தொழில் சேவை இயக்குனர்), ரோட்டராக்டர் நீலேஷ் (கிளப் சேவை இயக்குனர்) மற்றும் ரோட்டராக்டர் கல்பனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்கமளித்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...