கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை முதல் கடன் மேளா: பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 முதல் 30 வரை கடன் மேளா நடைபெறுகிறது. கல்வி, வீட்டு உபயோக பொருட்கள், வாகனம், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்.


கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை (ஜூலை 18) முதல் 30ம் தேதி வரை கடன் மேளா நடைபெற உள்ளது.

இந்த கடன் மேளாவில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், கலைஞரின் கனவு இல்ல கடன், வீட்டு வசதி கடன், சிறு, குறு தொழில்முனைவோர் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 39 கிளைகளில் இந்த கடன் மேளா நடைபெறும். இதில் வைப்பு நிதி சேகரித்தல் மற்றும் கடன் வழங்கும் முகாம்களும் நடத்தப்படும். வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

மேற்கூறிய கடன்களுடன், கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கு கடன், காலி மனை வாங்க கடன் உள்ளிட்ட கடன்களும் வழங்கப்படும். டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகிறது.

கடன் மேளாவின் தேதிகள் மற்றும் இடங்கள் பின்வருமாறு:

- ஜூலை 18: அன்னூர், போத்தனூர், ஆனைமலை

- ஜூலை 19: திருப்பூர், அவினாசி, மதுக்கரை, தொண்டாமுத்தூர்

- ஜூலை 20: ஆர்.எஸ்.புரம், அனுப்பர்பாளையம், ஒண்டிபுதூர், நெகமம்

- ஜூலை 22: மடத்துக்குளம், நல்லூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர்

- ஜூலை 23: கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, கிருஷ்ணாபுரம், கோவில்பாளையம்

- ஜூலை 24: பாப்பநாயக்கன்புதூர், பாப்பம்பட்டி, இடையர்பாளையம், கொங்கு மெயின்ரோடு

- ஜூலை 25: கோட்டூர், மேட்டுப்பாளையம், குறிச்சி

- ஜூலை 26: பல்லடம், பொள்ளாச்சி, காந்திமாநகர்

- ஜூலை 29: பெதப்பம்பட்டி, சோமனூர், கணபதி

- ஜூலை 30: சுல்தான்பேட்டை, சிங்காநல்லூர், சூலூர், ராமநாதபுரம், உடுமலைப்பேட்டை, டாக்டர் நஞ்சப்பா ரோடு

மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர் பயனாளிகளுக்கு தொடர் வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற வசதியாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...