கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நொய்யலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி மற்றும் கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து விநாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது.



இந்நிலையில் சில இளைஞர்கள், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல், ஆற்றில் இறங்கி 'செல்பி' எடுப்பது, குளிப்பது, மீன்பிடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோன்ற அபாயகரமான செயல்களைத் தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...