வால்பாறையில் கனமழை: சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு

வால்பாறையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான கருமலை, அக்காமலை, பச்சைமலை, வெள்ளமலை, சின்னகல்லார், நீறார் அணை, சின்கோனா, பெரியகல்லார், சோலையார் அணை, சேக்கல் முடி, புதுக்காடு மழுக்கபாறை ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையின் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நடுமலையாறு மற்றும் கூலாங்கள் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வால்பாறை நகராட்சி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பதிவான மழை அளவு மற்றும் சோலையாறு அணையின் நிலவரம் பின்வருமாறு:

- வால்பாறை: 69 மி.மீ

- நீரார் அணை: 74 மி.மீ

- சின்னகல்லார்: 105 மி.மீ (அதிகபட்சமாக 10 செ.மீ)

- சோலையாறு அணை: 62 மி.மீ

சோலையாறு அணைக்கு தற்போதைய நீர் வரத்து 7,753 கன அடியாக உள்ளது. அணையில் தற்போது 4 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த உயரம் 165 அடி என்ற நிலையில், தற்போது 140 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. ஒரே நாளில் 12 அடி உயரம் தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை முழு கொள்ளளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...