கோவை சின்னவேடம்பட்டியில் குருவணக்க நாள் விழா: மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழா தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழா குழந்தைகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான குமாரசாமி கூறுகையில், "தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த குருவணக்க நாள் விழா அமையும்" என்று தெரிவித்தார்.



விழா நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், மடாலய வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தகக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கெளமார மடாலயம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...