கோவை சின்னவேடம்பட்டியில் குருவணக்க நாள் விழா: மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழா தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழா குழந்தைகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான குமாரசாமி கூறுகையில், "தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த குருவணக்க நாள் விழா அமையும்" என்று தெரிவித்தார்.



விழா நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், மடாலய வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தகக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கெளமார மடாலயம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...