கோவையில் துவரம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு: மளிகைப் பொருட்கள் விலையும் அதிகரிப்பு

கோவையில் துவரம் பருப்பு விலை ரூ.195-ஆக உயர்ந்துள்ளது. குருமிளகு, சுண்டல், முந்திரி, ஏலக்காய், பட்டாணி போன்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மழை குறைவால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Coimbatore: கோவையில் துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து, ஏப்ரல்-மே மாதங்களில் நிலையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம் பருப்பின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 ஆக இருந்தது. கடந்த மாதம் இது ரூ.160 ஆக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.195-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மற்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது:

- குருமிளகு: ரூ.600-லிருந்து ரூ.780-க்கு உயர்வு

- சுண்டல்: ரூ.70-லிருந்து ரூ.110-க்கு உயர்வு

- முந்திரி: ரூ.550-லிருந்து ரூ.850-க்கு உயர்வு

- ஏலக்காய்: ரூ.1,800-லிருந்து ரூ.3,000-க்கு உயர்வு

- பட்டாணி: ரூ.80-லிருந்து ரூ.130-க்கு உயர்வு

கோவையின் தானிய மார்க்கெட் சந்தைகளில் பெரும்பாலான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஒரு வியாபாரி கூறுகையில், "மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மழைப் பொழிவு குறைவால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது," என்றார்.

மேலும் அவர், "முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை," எனத் தெரிவித்தார்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...