கோவை மாநகராட்சி ஆணையர் மழைக்கால டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கொசு உற்பத்தியை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆணையர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிப் பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால், மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்படும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், கொசுக்கள் பெருக்கத்தை முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...