பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்த அமைச்சர், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் வழியாக சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், திடீரென கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் தனித்திறமைகளை நேரடியாக கேட்டறிந்தார். மேலும், ஆசிரியர்களிடம் மாணவிகளின் கல்வித்திறன் பற்றி விசாரித்தார். ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளிடம் அன்று நடைபெற்ற பாடத்தின் கேள்வி வினாக்களையும் கேட்டு அறிந்தார்.

மாணவிகளுடன் உரையாடிய அமைச்சர், "கிராமத்தில் படிக்கும் நீங்கள் கண்டிப்பாக இடைநிலை கல்வியை தவிர்க்க வேண்டும். உயர்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும்" என்று வலியுறுத்தினார். இவ்வாறு மாணவிகளுக்கு ஊக்கமளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடைபெற்றார்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...