பொள்ளாச்சி அருகே நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி சீரழிவு: மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து, பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலத்தில் பள்ளிக்குள் நீர் தேங்குவதால் மாணவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மோசமான நிலையில் உள்ளது. இந்த பழமையான பள்ளியில் தற்போது 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் பலவீனமாகவும் காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் பள்ளிக்குள் ஊடுருவி தேங்கி நிற்கிறது. மேலும், பலவீனமான சுவர்களில் மழைநீர் ஊடுருவுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.



இந்த அவலநிலையை சரிசெய்ய கோரி பெற்றோர்கள் பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி இருப்பதால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பள்ளியை விரைவாக சீரமைத்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...