கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி, ஆட்சியர் ஆய்வு

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜூலை 16 அன்று மதியம் அப்பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் Kranthi Kumar Pati, "சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்," என்றார்.



ஆட்சியர் மேலும் கூறுகையில், "இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும்," என்றார்.

சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்ற 2020 அக்டோபர் மாத கோவை மாநகராட்சி தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



"மேலும் 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...