காங்கேயம் அருகே கார் விபத்து: அமைச்சர் உறவினர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து. அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் ஜெகன் பிரகதீஷ் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜெகன் பிரகதீஷ் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். நள்ளிரவில் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஓட்டிச் சென்ற ஜெகன் பிரகதீஷ், பாப்பினி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.



விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் பிரகதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த ஜெகன் பிரகதீஷ், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அண்ணன் மகன் என்பதும், அவரது குடும்பத்தின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...