கோவை: கல்வி நிறுவனங்களில் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டி, புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளார். மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பிரச்சனைகள் குறித்து கூறினாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பள்ளிகள் தங்களது நற்பெயர் கெட்டுவிடும் என்றும் இது போன்ற பிரச்சனைகளை மறைத்து விடுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் ஆலாந்துறை அரசு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சின்மயா பள்ளி மாணவியின் பாலியல் வழக்கு, மற்றும் சமீபத்தில் வடவள்ளி ஓணப்பாளையம் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் POCSO சட்டம் சார்ந்த விழிப்புணர்வின்மையை காட்டுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உடனடியாக உள் புகார் கமிட்டி (ICC கமிட்டி) அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வனைத்து புகார் கமிட்டிகளையும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான புகார் கமிட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...