கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை பொள்ளாச்சியில் 60 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஜூலை 15 அன்று இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் பெரும் அளவில் கஞ்சா விற்பனை செய்த இரு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசீர் மகன் ரஷீத் (30) மற்றும் உமர் மகன் கலீல் ரகுமான் (44) ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் 60 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவ்விருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட இரு நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, ஜூலை 15 அன்று கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ரஷீத் (30) மற்றும் கலீல் ரகுமான் (44) ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...