கோனேரிப்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் கோனேரிப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக நியாயவிலைக் கடை கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் சுமார் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், அங்குள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கோனேரிப்பட்டியில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், அங்கு படிக்கும் மாணவர்களிடம் அவர்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...