பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு கட்டுமானத்தில் தரமற்ற கலவை: பழங்குடியினர் புகார்

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில் சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக பழங்குடியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எருமப்பாறை மற்றும் கூமாட்டி ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில், சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யாவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



பொதுவாக, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் மிக முக்கியமானது. சிமெண்ட் கலவை பயன்படுத்தினால் கட்டிடம் உறுதியாக இருக்கும். ஆனால், தற்போது கட்டப்படும் குடியிருப்புகளில் கற்களை அடுக்கி, அதன் மீது சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற செம்மண் கலவை பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மலைப்பிரதேசங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், இங்கு கட்டப்படும் வீடுகள் குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன. இந்நிலையில், தரமற்ற கலவை பயன்படுத்தப்பட்டால் கட்டிடங்கள் வலிமை இழக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...