பொள்ளாச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டி: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். 2025ல் உலக கராத்தே போட்டி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் இன்டர்நேஷனல் சிண்டோ கான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டி பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்ற வயது மற்றும் எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டா, குமிட்டே, டீம் கட்டா ஆகிய மூன்று செயல்முறைகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பொள்ளாச்சியில் உலக கராத்தே போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலகப் போட்டியில் 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொள்ளாச்சி பகுதிக்கு பெருமை சேர்க்கும் என இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...