பொள்ளாச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டி: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். 2025ல் உலக கராத்தே போட்டி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் இன்டர்நேஷனல் சிண்டோ கான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டி பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்ற வயது மற்றும் எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டா, குமிட்டே, டீம் கட்டா ஆகிய மூன்று செயல்முறைகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பொள்ளாச்சியில் உலக கராத்தே போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலகப் போட்டியில் 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொள்ளாச்சி பகுதிக்கு பெருமை சேர்க்கும் என இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...