பொள்ளாச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டி: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். 2025ல் உலக கராத்தே போட்டி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் இன்டர்நேஷனல் சிண்டோ கான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டி பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்ற வயது மற்றும் எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டா, குமிட்டே, டீம் கட்டா ஆகிய மூன்று செயல்முறைகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பொள்ளாச்சியில் உலக கராத்தே போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலகப் போட்டியில் 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொள்ளாச்சி பகுதிக்கு பெருமை சேர்க்கும் என இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...