கோவையில் மது போதையில் டாஸ்மாக் அருகே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

கோவை வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 50 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50) என்பவர் வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு மேஜையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர் சேகரை மீண்டும் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்துள்ளார். அவரைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.



நீண்ட நேரம் ஆகியும் சேகர் எழுந்து செல்லவில்லை. அப்போது அங்கு மது அருந்த வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அவரைத் திருப்பிப் பார்க்கும்போது கல்லில் பின் பக்க தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து டாஸ்மாக் பார் ஊழியர்களிடமும், சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டு சேகரைக் கீழே தள்ளிக் கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...