கோவையில் மத ஒற்றுமையைப் பறைசாற்றிய இஸ்கான் தேரோட்டம்..!

கோவையில் இஸ்கான் அமைப்பின் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த தேரோட்டம் நடத்தப்பட்டது.

தேர்முட்டியில் தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டி நோக்கிச் சென்றது. ஒப்பணக்கார வீதியில் தேர் சென்ற போது, அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்றனர். இஸ்கான் அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த செயல் பார்ப்போரை நெகிழச் செய்தது.



அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஜெகன்னாதர், சுபத்ரா தேவி, பலதேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள், "ஹரே ராம ஹரே கிருஷ்ணா" என்று பஜனை பாடிக் கொண்டும், பெண்களும் சிறுமிகளும் கும்மியாட்டம் ஆடிக் கொண்டும் சென்றனர்.



பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த தேரோட்டமானது நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தேரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த தேரோட்டம் கோவையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...