தாராபுரம் பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளில், யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், கும்பம் மற்றும் கடம் புறப்பாடு ஆலயத்தை வலம் வந்து, ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்கள் மற்றும் புதிய கோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.



அங்காளம்மன் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன், கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்காளம்மன் திருவுருவம் செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மனின் அருளைப் பெற்றனர். இந்த விழா சகல செல்வங்களையும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...