பொள்ளாச்சி அருகே கராச்சேரி மாகாளியம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் உள்ள பழமையான மாகாளியம்மன் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கராச்சேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 8-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, மூன்று நாட்கள் பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்களுடன் தொடர்ந்தது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்தபடி, மலர்கள் தூவப்பட்டு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.



கோபுரத்தின் உச்சியில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். மேலும், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, இந்த புனித நிகழ்வை கண்டு வழிபட்டனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...