கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி துவக்கம்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியை துவக்கி வைத்தார். 42 பள்ளிகளைச் சேர்ந்த 950க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் மாநகराட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தடகளப் போட்டியினை துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு உள் விளையாட்டு அரங்கில், எஸ்.என்.எஸ் கல்வி குழுமம், வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தடகளப் போட்டியினை மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் அவர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (12.07.2024) துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கல்வித்திறனை மட்டுமல்லாது மாணவ, மாணவியர்களின் தனித் திறன்களையும் வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (12.07.2024) எஸ்.என்.எஸ் கல்வி குழுமம், வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் தடகளப் போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.



இப்போட்டியில் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 42 பள்ளிகளைச் சேர்ந்த 950 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், அதேபோன்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பள்ளிகளுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் Dr சு.செல்வசுரபி, மத்திய மண்டல குழுத் தலைவர் மீனா லோகு, கல்விக்குழுத் தலைவர் மாலதி நாகராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அருணா, மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன், வி.ஜி.எம் மருத்துவமனை தலைவர் வி.ஜி.மோகன் பிரசாத், எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வர் எஸ்.செந்தூர் பாண்டியன், சக்தி கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபன் தங்கவேலு, கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவர் பி.கே.சம்சுதீன், பொருளாளர் ஜான் சிங்கராயர், துணைத் தலைவர்கள் கோவை ரமேஷ், ஜி.கே.ரத்தினவேல், கோவை அத்லெடிக் கிளப்பின் தலைவர் மற்றும் தமிழ்நாடு தடகள தொழில்நுட்ப தலைவருமான எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...