உடுமலையில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ருத்ரப்ப நகரில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல்வேறு சடங்குகளுடன் கூடிய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்ப நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகர், விசாலாட்சி அம்மன், பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழா கடந்த 10ம் தேதி புனித தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் முளைப்பாறி எடுத்தல் நிகழ்வுடன் துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகம், மங்கள இசை, வேத பாராயணம், விக்னேஸ்வரா பூஜை, புண்யாக வசனம், வேதிகார்ச்னை, தத்கல் மூலமந்திர ஹோமங்கள், யார்ர தானம், கடம் புறப்பாடு ஆகிய சடங்குகள் நடைபெற்றன.



தஞ்சாவூர் தினேஷ் செல்வ முத்துக்குமார் சிவாச்சாரியர் தலைமையில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் இராஜ கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகா தேவி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பேராதரவுடன் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...