கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பத்து நாள் நிகழ்வில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள அப்புலுபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு கடந்த பத்தாம் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.

விழாவின் முதல் நாளில், ராஜ கணபதி கோயிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அடுத்த நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.



ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் விக்கிரகங்களுக்கு நூதன பிம்ப சுத்தி திருமஞ்சனம், விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேக நாளன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜை, அபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவைச் சேர்ந்த வி.ராஜேந்திரன், குணசேகரன், பாலாஜி, அருள்மணி, சேகரன், வீரபத்திரன், தேவராஜ், ஜெயலட்சுமி, தாமோதரசாமி நாயுடு மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...